Thursday, February 28, 2013

கதையல்லாத கயிறுகளின் நெடி


சாணத்தின் மணம் நீளும்
ஒரு விடியா விடியலின் வாசலில்
மா நிறைந்த கைகளுடன் நிற்கிறேன்...


மூடுபனியின் இறுக்கத்தில் நனையும் மௌனத்தை
இலகுவாய் உரசிச் செல்கிறது,
இடைவிடாது ஒலித்த
பால்காரச் சிறுமியின் வளையோசை.. 


 மீள்மூச்சுடன் தட்டிக் கொண்டிருந்த
சிறுமிக்கு எள்ளளவும் செவிசாய்த்ததாய்
தெரியவில்லை,
இருள் மூகமூடியணியாத எதிர்வீட்டு மரக்கதவு..
  

நிமிடத்தின் தொடர்ச்சியிலும்
திறவாத கதவுகளின்
பெருங்கோப்பை அளவிலான அகாலத்தை
நொசிவிழைக் கயிற்றின் நெடி
அரவமற்று கதைத்துக் கொண்டிருக்கிறது..
  

விடியும் விடியலின் ஓரத்தில்
ஒரிரு புள்ளிகளுக்குள் அடங்கி விடுகிறது
இழுக்க நினைத்த மாக்கோடுகள்.. 

- தேனு

நன்றி கீற்று,
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=22440&Itemid=139

2 comments:

  1. வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

    வலைச்சர அறிமுக வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. வணக்கம்
    இன்று வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள் அருமையான கவிதை,

    பார்வைக்குhttp://blogintamil.blogspot.com/2013/03/blog-post_14.html

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete